தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜூலை 23: பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்- கருப்பு துணியில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக, பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு, நேற்று 22ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருப்புத் துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டம் நடை பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சிவகலை தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சின்னதுரை வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் புலிகுட்டி, சுந்தர்ராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் மகாலிங்கம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பால் சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை ஆகியோர் வாழ்த்துரை பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்து சாமி நன்றி தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பெண்கள் கருப்பு துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related News