தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்

தூத்துக்குடி, ஜூலை 23: குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு வரும்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத தொகையை வழங்கவேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பாக கருப்பு முக்காடு, ஒப்பாரி என நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வைஜெயந்தி மாலா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி செல்வம், நகரச் செயலாளர் வெனிற்றால் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முக லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி: இதேபோல் கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க வட்டாரத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ராமலட்சுமி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கனகவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஓய்வுபெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கினர். இதில் கயத்தாறு ஒன்றிய குழு உறுப்பினர் மாரிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் தலையில் முக்காடு அணிந்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related News