தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்கள்

 

Advertisement

வேலூர், மே 31: வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் கட்டை விரலை கவனக்குறைவால் செவிலியர்கள் துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் முள்ளிபாளையம் மாங்காய் மண்டி பகுதியை சேர்ந்தவர்கள் விமல்ராஜ்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிவேதா(24). இவருக்கு கடந்த 24ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீமான்ஸ் பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக ஏற்கனவே இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கை மணிக்கட்டில் ஊசியுடன் டியூப்பை ஒட்டியிருந்த டேப்பை கத்திரியால் வெட்டினர். அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தையின் கட்டை விரலையும் சேர்த்து செவிலியர்கள் துண்டாக்கி விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பெற்றோருடன் தகவல் அறிந்து வந்த உறவினர்களும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக துண்டான விரலுடன், குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement