தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: வியாழக்கிழமைதோறும் நடக்கிறது

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் 15.5.2023 முதல் தென் சென்னை, வட சென்னை என இரண்டாக பிரிக்கப்பட்டு தென்சென்னை அலுவலகம் டி.எம். எஸ். வளாகத்திலும், வட சென்னை அலுவலகம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் பின்புறத்திலும் இயங்கிவருகிறது. தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், சென்னை கே.கே.நகர், மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் நடந்து வருகிறது.
Advertisement

சென்னை இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் வடசென்னை பகுதிக்குட்பட்ட 1 முதல் 8 வரையிலுள்ள (திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் அம்பத்தூர், அண்ணாநகர்) மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் வருகிற 8ம் தேதி முதல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மருத்துவ கல்லூரி எதிரில் சுரங்கப்பாதை அருகில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம்-5, அசல் மற்றும் நகலுடன் வந்து தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement