தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

 

Advertisement

கடலூர், அக். 7: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் நேற்று குவிந்தனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் ஏராளமான பொதுமக்கள் அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவை உட்கொள்வர். மேலும் சனிக்கிழமைகளில் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமைகளில் தளியல் போட்டு பெருமாளை வழிபடுவர்.

மூன்றாவது சனிக்கிழமை முடிந்ததும் அசைவ பிரியர்கள் சிலர் விரதத்தை முடித்துவிட்டு, அசைவத்தை வாங்கி உண்பர். அதன்படி நேற்றுமுன்தினம் மூன்றாவது சனிக்கிழமை முடிந்ததை தொடர்ந்து நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நேற்றுமுன்தினம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 3 மணி முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். இதனால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு தரப்பினரும் வந்து மீன்களை வாங்கி சென்றனர்.

வஞ்சிரம் கிலோ 800 ரூபாய்க்கும். சங்கரா மீன் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 400 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், இறால் கிலோ 270 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Related News