தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடைசெய்யப்பட்ட பேப்பர் கப்புகள்; பிளாஸ்டிக் தட்டுகள் பயன்படுத்திய சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

ஊட்டி,நவ.28: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே கேரி பேக் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் கப்புகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள்,கத்திகள்,முள் கரண்டிகள்,பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக்தட்டுகள் உட்பட 19 வகையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தவிர ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துபவர்கள் அவற்றை பயன்படுத்தி விட்டு பொது இடங்கள், வனங்களில் வீசி எறிகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது.

Advertisement

இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். பின்னர் அவற்றை பொது இடங்களில் வீசி சென்று விடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெலிங்டன் பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்றில் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தனியார் பஸ்சில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள், தட்டுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

Advertisement