தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் முகாம்

கோத்தகிரி, செப்.2: கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் குடியிருப்புவாசிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கிராமத்திற்கு அருகே உள்ள தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்ததைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து இரவு நேரத்தில் இங்குள்ள குடியிருப்பு பகுதியில் அந்த காட்டு யானைகள் உலா வந்தது. அங்குள்ள வீடுகளில் பெரும்பாலான வீடுகள் மண் குடிசைகளாக இருப்பதால், யானை வீடுகளை தாக்கினால் வீடு முழுவதுமாக சேதமடைந்து விடுமோ? என்கிற அச்சத்தில், மக்கள் சத்தம் போட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோத்தகிரி வனத்துறையினர் இடுக்கொரை கிராமத்தில் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement