தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதாள சாக்கடை பணியின் போது இரும்பு குழாய் விழுந்து தொழிலாளி பலி

ஊட்டி, அக்.12: ஊட்டி அருகே பாதாள சாக்கடை பணியின்போது இரும்பு குழாய் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.குன்னூர் அருகே உள்ள சேலாஸ் கரும்பாலம் வாணி விலாஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கர்ணா (21). கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அதிகரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேத்தி பாலாடா பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கருணா உள்பட 10 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருணா மற்றும் 4 பேர் சேர்ந்து சுமார் 300 கிலோ எடையுள்ள இரும்பு குழாயை தூக்கியபோது மற்றவர்களுக்கு கைநழுவியதால் கர்ணா மீது இரும்பு குழாய் விழுந்தது.

Advertisement

இதில், கர்ணா குழாய்க்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக குழாயை அகற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக, லவ்டேல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த காண்ட்ராக்டர் ஈஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். குழாய் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement