தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனாடு பகுதியில் காட்டேஜுக்கு சீல்

ஊட்டி, ஆக. 27: ஊட்டி அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட காட்டேஜ்க்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாஸ்டர் பிளான் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ேவண்டுமாயின், வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

Advertisement

தற்போது நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டுமாயின், மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த குழுவிடம் அனுமதி பெற தாமதம் ஏற்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விதிமுறைகள் மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தனியார் காட்டேஜ்கள் ஆங்காங்கே முளைத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தேனாடு தலக்காடுமட்டம் என்ற பகுதியில் விதிமுறை மீறி ஒரு காட்டேஜ் கட்டப்பட்டுள்ளது. விதிமுறை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Advertisement