தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொரனூர் ரயில் நிலையத்தில் பிரபல வழிப்பறி திருடன் கைது

பாலக்காடு, நவ. 21: பாலக்காடு மாவட்டம், சொரனூர் ரயில்நிலையத்தில் கடந்த 18ம் தேதி, மங்களூரு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்லம் மாவட்டம், அஞ்சலை பகுதியை சேர்ந்த ஷஜூ (35) என்பவர் பயணம் செய்தார். அவர், தனது செல்போனை ரயிலில் உள்ள பிளக் பாயின்ட்டில் சார்ஜ் போட்டிருந்தார். இரவு 11.30 மணி அளவில் ரயில் சொரனூர் சந்திப்பில் நின்றபோது, செல்போனை ரயிலில் இருந்த ஒருவர் திருடிவிட்டு தப்பிஓடினார்.

Advertisement

இதுகுறித்து ஷஜூ, அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் எஸ்.ஐ. அனில்மாத்யூ, ஏ.எஸ்.ஐ. சுர்ஜித்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபைல் போன் டவரை வைத்து போலீசார் லோக்கேசனை கண்டுபிடித்து ரயில்நிலையம் அருகிலேயே மர்ம ஆசாமியை பிடித்தனர்.

விசாரணையில், வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை அடுத்த சீரால் வரிக்கேரி காலனியைச் சேர்ந்த கண்ணன் (எ) மணி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அவரிடம் இருந்து மீட்டனர். தீவிர விசாரணையில், அவர் ஏற்கனவே கோழிக்கோடு, கொடுங்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement