தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம்

குன்னூர், நவ. 21: குன்னூர் அருகே குடியிருப்பு வளாகத்தில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அண்மை காலமாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் மட்டுமே இருந்து வந்த வனவிலங்குகளின் நடமாட்டம், தற்போது நகரப் பகுதிகளில் உள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி அலுவலகப் பணியாளர்களும் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement

உபாசி குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் கரடி ஒன்று நாள்தோறும் வந்து கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து அட்டகாசம் செய்து வருவதாக புகார் எழுந்தது. கடந்த 15ம்தேதி நள்ளிரவில் அங்குள்ள குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த கரடி, வீட்டு கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவரும் பட்சத்தில் பொதுமக்கள் இரவு நேரம் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊருக்குள் உலா வரும் வனவிலங்குகளை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement