ஆண் சடலம் மீட்பு
சத்தியமங்கலம், நவ.19: பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் தொப்பம்பாளையம் வாய்க்கால் பாலத்தில் இருந்து எரங்காட்டூர் செல்லும் வழியில் வாய்க்கால் ஓரத்தில் நீரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த ஆண் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக நேற்று காலை பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் சட்டை பையில் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் சென்றதற்கான பஸ் டிக்கெட் இருந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement