தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டியில் நாளை ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

ஊட்டி, செப். 19: நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ கூறியிருப்பதாவது: நீலகிரி எம்பி மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாளை 20ம் தேதி காலை 10.30 மணியளவில் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை அரங்கில் வனத்துறை அதிகாரிகளுடன் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Advertisement

பிற்பகல் 3 மணிக்கு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைகான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். மாலை 4.30 நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கீழ் கோத்தகிரி குயின்சோலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கீழ்கோத்தகிரி ஒன்றியம் சார்பில் நடக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பகல் 12.30 மணிக்கு கோத்தகிரியில் நீலகிரி மாவட்டத்திற்கான வார் ரூம் திறந்து வைக்கிறார். முன்னதாக, நாளை 20ம் தேதி ஊட்டியில் நடக்கும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement

Related News