தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி காந்தல் பிரதான சாலை சீரமைப்பு

ஊட்டி, செப். 18: ஊட்டி காந்தல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின் சாலை சீரமைக்கப்படும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு காந்தல் பகுதியில் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த ஒரு தேவைகளுக்கும் ஊட்டி நகருக்கு வந்துச் செல்ல வேண்டியுள்ளது.

Advertisement

இந்நிலையில், காந்தல் பகுதியில் இருந்த சாலை மிகவும் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால், அந்த பள்ளத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.  இச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என வார்டு கவுன்சிலர் கீதா மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், பழுதடைந்த சாலைைய சீரமைக்க உடனடியாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது சாலை பழுதடைந்திருந்த இடத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு பணிகளை கவுன்சிலர் கீதா மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என அறிவுறித்தினர். பல ஆண்டுகளுக்கு பின் காந்தல் சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement