தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுப்பிரமணியர் கோவிலில் அக்.27ம் தேதி சூரசம்ஹாரம்

பாலக்காடு, அக்.17: பாலக்காடு மாவட்டம் சித்தூர் கடைவீதியில் அமைந்துள்ள குமாரநாயக சுப்ரமணியர் சுவாமி கோவிலில் 148வது ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா அக்.27ம் தேதி நடைபெறுகிறது. இக்கோவிலில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி அக்.22ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோம பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகிறது. அன்றையதினம் காலை 7 மணிக்கு விழாக் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விஷேச பூஜைகளும் நடைபெறவுள்ளது.

Advertisement

அக்.22ம் தேதி முதல் அக்.26ம் தேதி வரை இரவு 7 மணி முதல் இரவு 8.30 வரையிலாக சித்தூர்-தத்தமங்கலம் ஜெய கிருஷ்ணனின் கந்தப்புராண சொற்பொழிவு நடைபெறுகிறது. தொடர்ந்து பஜனை நிகழ்ச்சியும் நடக்கின்றன. அக்.27ம் தேதி காலை 8 மணிக்கு சித்தூர் சோகநாஷினி நதியிலிருந்து செண்டை வாத்யங்களுடன் யானை மீது தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு சுவாமி அபிஷேக - அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வீரபாகு சமேத முருகப்பெருமான், சூரர்களுடன் வீதியுலா சித்தூர் வட்டாரத்தில் நடைபெற்ற பின் இரவு 7 மணியளவில் சூரர்களை வதைக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

 

Advertisement