தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கூடலூர், அக். 16: தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கூடலூர் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூடலூர் ஆர்டிஓ குனசேகரன் கூட்டத்துக்கு தலைமை வகித்து விவசாயிகள் மத்தியில் குறைகளை கேட்டறிந்தார். தாசில்தார் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

Advertisement

வேளாண் பொறியியல் துறை, வேளான் வணிகத்துறை, கால்நடைகள் பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஊட்டி, மின்சார வாரியம் ஆகிய துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு துறை மூலமாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். தோட்டக்கலைத்துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இணைந்து விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Advertisement

Related News