தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3 டன் அன்னாசி பழங்களால் ஜாம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

குன்னூர், டிச.13: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் பழப் பண்ணை உள்ளது. மேலும் சிம்ஸ் பூங்கா மற்றும் பர்லியார் அருகே உள்ள பழப் பண்ணைகளில் விளையும் பழங்கள் ஜாதிக்காய், நெல்லிக்காய் கொண்டு ஜாம், மிக்சட் புருட், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்து சுற்றுலா பயணிகளிடம் ஊழியர்கள் நேரடி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சமவெளி பகுதிகளில் விளைந்த அன்னாசி, வாழை மற்றும் பப்பாளி போன்ற 3 டன் அளவிலான பழ வகைகளை கலவையாக கொண்டு இயற்கை முறையில் ஜாம் தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தோட்டகலை துறை சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் தமிழக அரசு நேரடியாக விற்பனை செய்து வருவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisement

குறிப்பாக ஜாம், ஜீஸ், ஊறுகாய்கள் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களான காட்டேரி, பர்லியார், கல்லார், கோவை செம்மொழி பூங்கா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தோட்டக்கலை துறையில் தயாரிக்கப்படும் ஜாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்ல வாய்ப்புள்ளதால் சுமார் 3,000க்கும் மேற்பட்ட பாட்டில்களில் அடைத்து வைத்து விற்பனை செய்வதற்காக இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Advertisement