தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்; ஓணிகண்டியில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை

மஞ்சூர், டிச. 13: ஓணிகண்டி பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது ஓணிகண்டி. மஞ்சூர்- கோவை பிரதான சாலையில் அமைந்துள்ளது. கோவை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காரமடை, முள்ளி, கெத்தை வழியாக மஞ்சூர் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் அனைத்தும் ஓணிகண்டி வழியாகவே சென்று வரவேண்டும். இதேபோல் கேரளா மாநிலம் அட்டபாடி, அகழி, மண்னார்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீலகிரி வரும் பயணிகளின் வாகனங்களும் இந்த வழியாகவே சென்று வருகிறது.

Advertisement

இது மட்டுமின்றி பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் ஓணிகண்டி வழியாகவே செல்லவேண்டும். இதனால் ஓணிகண்டி பகுதியில் வாகனப் போக்குவரத்து மிகுதியாக காணப்படும். குறிப்பாக ஓணிகண்டி கடைவீதி வழியாக வாகனங்கள் சென்று வரும்போது பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிவேக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஓணிகண்டி கடைவீதியில் 2 இடங்களில் வேகத்தடைகளை அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement