தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அருகே லாரிக்கு வழிவிட்டபோது அரசு பஸ் மீது சாய்ந்து விழுந்த மின்கம்பம்

ஊட்டி, டிச. 13: ஊட்டி அருகே அரசு பஸ் மீது மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து பெந்தட்டி கிராமத்திற்கு நாள்தோறும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. எப்பநாடு, கொரனூர், கெங்கமுடி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இந்த பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதிக்கு இந்த ஒரு பஸ் மட்டும் இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் 40 பயணிகளுடன் பெந்தட்டியில் இருந்து ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை டிரைவர் ஜெயபிரகாஷ் ஓட்டினார். கண்டக்டராக ரவிக்குமார் இருந்தார். பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரில் லாரி வந்ததால் பஸ் வழிவிட்டு ஒதுங்கி நின்றது. அப்போது லாரியும் பஸ்சும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் லாரி சாலையை விட்டு சற்று கீழே இறங்கியது.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது உரசி மின்கம்பம் சாய்ந்தது. அதே சமயம், எதிரில் இருந்த மற்றொரு மின்கம்பம் அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதனைக்கண்ட பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கினர். அப்போது அதிர்ஷ்டவசமாக மின்ஒயர் அறுந்துவிட்டதால் பஸ் மீது மின்சாரம் பாயாமல் பயணிகள் உயிர் தப்பினர். உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின் ஒயர்களை சரி செய்தனர். அதன்பின் அங்கிருந்து அரசு பஸ் ஊட்டி நோக்கி சென்றது. இச்சம்பவம் காரணமாக ஊட்டி- தேனோடுகம்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement