தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி, செப். 13: கோத்தகிரி கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

Advertisement

இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலங்களில் மலை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மூன்றரை மாத பயிரான முட்டைகோஸ் பயிரிடுவர். பருவமழை காலத்தின்போது பூமி விவசாயத்திற்கு ஏற்ற சூழலிலும், வெயிலின் தன்மையும், மழையும் விவசாயத்திற்கு ஏற்றவாறு உள்ளது. முட்டைகோஸ் பயிரிட ஏற்ற சீதோஷ்ணநிலை உள்ளதால் அதிகளவில் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, ஈளாடா, கதகட்டி, எஸ்.கைக்காட்டி, நெடுகுளா அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உரம், தண்ணீர், மருந்துகள் தெளித்து பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸ் பயிர்களை பராமரித்து அறுவடைக்கு நன்கு தயார்படுத்தி வருகின்றனர். இதனால் அறுவடையின்போது நன்கு விளைச்சல் இருக்கும் எனவும், உரிய விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement