தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் தலைச்சுற்றல் பேருந்து இடையில் நிறுத்தம்

பந்தலூர், ஆக. 13: அரசு பேருந்து ஓட்டுநருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் பயணிகளுடன் பேருந்தை இடையில் நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. கூடலூர் அரசு போக்குவரத்து கழகம் கிளையில் இருந்து சேரம்பாடி பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தை ஓட்டுநர் மது (45), நேற்று சேரம்பாடியில் இருந்து கூடலூர் நோக்கி செல்லும் போது பந்தலூர் பஜார் பகுதிக்கு வரும் போது திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

சுதாகரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் அதிகரித்து சக்கரை அளவு குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேருந்தை மாற்று ஓட்டுநர் மூலம் கூடலூருக்கு இயக்கப்பட்டது, அதில் ஓட்டுநர் மதுவும் பயணித்துள்ளார் ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய ஓட்டுநர்கள் மட்டும் நடத்துனர்கள் இல்லாததால் பணியில் இருக்கும் ஓட்டுநர்கள் கூடுதலாக பணி செய்யவேண்டிய கட்டாயத்தால் ஒரு சில ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

Advertisement

Related News