தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது அருந்தும் பாராக மாறிய நடைபாதை

ஊட்டி, செப். 12: ஊட்டி- கோத்தகிரி சாலையில் இருந்து பூங்கா செல்லும் நடைபாதை மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி- கோத்தகிரி சாலையில் உழவர்சந்தை அருகே உள்ள பாலத்தை ஒட்டி நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை வழியாக சென்றால் பூங்கா சாலைக்கு செல்ல முடியும். இதனால் இச்சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

ஒதுக்குபுறமாக உள்ள இந்த நடைபாதை இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாகவும் மது அருந்தும் பாராகவும் மாறி காட்சியளிக்கிறது. மது அருந்தும் குடிமகன்கள் மதுபாட்டில்களை நடைபாதைகளிலேயே வீசி செல்வது, குடிபோதையில் நடைபாதையை அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் நடைபாதையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பகல் நேரங்களில் நடைபாதையை பயன்படுத்துவோர் மூக்கை மூடிக்கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மறறும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி நடைபாதையை தூய்மைப்படுத்துவதுடன் அசுத்தம் செய்வதை தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

 

Advertisement