தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோரத்தில் விபத்து அபாயம் தடுப்பு அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மஞ்சூர், செப். 10: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. கிண்ணக்கொரை, இரியசீகை, கோரகுந்தா, அப்பர்பவானி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் தாய்சோலா வழியாகதான் சென்று வரவேண்டும். வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதுடன், கொண்டை ஊசி வளைவுகளுடன் மிக குறுகிய சாலையாக உள்ளது. மேல்குந்தா முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் பல இடங்களிலும் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்க வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

இப்பகுதியில் சாலையோர தடுப்பு இல்லாததால் குறிப்பாக கனரக வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது இடப்பற்றாக்குறையால் பள்ளத்தில் தவறி விழுகின்றனர். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் முன் அப்பகுதியில் சாலையோரத்தில் தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

Advertisement

Related News