தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமான மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

ஊட்டி, ஆக. 9: ஊட்டி-எமரால்டு சாலையில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுக்கு முன்பு கற்பூர மரங்கள், சீகை மரங்கள் மற்றும் சாம்பிராணி மரங்கள் அதிகளவு நடவு செய்யப்பட்டன. தற்போது இந்த மரங்கள் நெடுநெடு என வளர்ந்து காணப்படுகிறது.

Advertisement

மழைக்காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும் போது இந்த மரங்கள் சாலையில் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சில சமயங்களில் வாகனங்கள் மீது விழுந்து வாகனங்களும் சேதமடைகின்றன. இந்நிலையில் சாலையோரங்களில் விபத்து அபாயம் நிறைந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பெரும்பாலான பகுதிகளில் விபத்து நிறைந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விபத்து அபாயம் இருக்கிறது. இந்நிலையில் ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில், சில இடங்களில் கற்புர மாரங்கள் சாய்ந்து தொங்கிக் கொண்டிருப்பதால் இவைகள் எந்நேரமும் விழும் அபாயம் நீடிக்கிறது. எனவே இச்சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் கற்பூர மரங்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement

Related News