தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்குள் விஷ பாம்பு புகுந்ததால் பரபரப்பு

கூடலூர், ஆக. 6: கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் கழிப்பறைக்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் புதர்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன.

மேலும், இங்குள்ள கழிவறை பகுதியில் சுவர் மற்றும் கதவுகளில் ஓட்டைகளும் உள்ளன. புதர் பகுதியில் ஏராளமான பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. குறிப்பாக விஷம் அதிகம் உள்ள கட்டு விரியன் பாம்புகள் இப்பகுதியில் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கழிவறை பகுதிக்குள் அங்குள்ள ஓட்டை வழியாக பாம்பு ஒன்று புகுந்தது.

பாம்பு குழந்தைகள் வார்டு பகுதி கழிப்பறைக்குள் வருவதை பார்த்த குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த அங்குள பணியாளர்கள் பாம்பை அங்கிருந்து அருகில் உள்ள புதர் பகுதிக்குள் விரட்டினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related News