தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயக்காட்டில் ரசாயன கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி வயலுக்குள் பாய்ந்தது

பாலக்காடு, நவ. 1: பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே வயக்காட்டில் ரசாயன கலவை கலந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.  பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே தோலணூரை சேர்ந்தவர் ஓமனக்குட்டன் (42). இவர் டேங்கர் லாரி டிரைவர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தரூரிலிருந்து ரசாயன கலவை ஏற்றிய டேங்கர் லாரியை தோலணூருக்கு ஓட்டி வந்தார்.

Advertisement

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்தது. அந்த வழியாக வந்தவர்கள் கோட்டாயி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து லாரியிலிருந்த ரசாயன கலவையை வேறு டேங்கர் லாரிக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டாயி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் லாரி டிரைவர் ஓமனக்குட்டன் மது அருந்தி விட்டு லாரியை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

Advertisement