தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் அருகே மரத்தில் ஏறி தேனை ருசித்த 2 கரடிகள்

 

Advertisement

குன்னூர், ஆக. 19: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில், குறிப்பாக தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகளால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் கரடிகள் உணவுக்காக உயரமான மரங்களில் ஏறி தேன்கூடு, நாவல் பழம், உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில், குன்னூரில் இருந்து கொலக்கொம்பை செல்லும் சாலையில் உள்ள கீழ் பாரதிநகர் என்ற கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் மரத்தின் உச்சியில் ஏதோ இரண்டு கருப்பு உருவம் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதை உற்று கவனித்தபோது, எந்த சத்தமில்லாமல் 2 கரடிகள் மரத்தில் இருந்த தேன்கூட்டை கலைத்து தேனை ருசி சாப்பிட்டு கொண்டிருந்ததை கண்டனர். சிறிது நேரம் மர உச்சியில் தேனை ருசித்த கரடிகள் மனிதர்களின் கூச்சல் சத்தத்தை கண்டதும் மின்னல் வேகத்தில் மரத்திலிருந்து கீழே இறங்கி தேயிலை தோட்டங்களுக்குள் சென்று மறைந்தது. இதை செல்போனில் பதிவு செய்த அப்பகுதியினர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

 

Advertisement

Related News