தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குன்னூரில் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்து கார், மின்கம்பம் சேதம்

 

குன்னூர், ஆக.18: குன்னூரில் பலத்த காற்று காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் கார் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சில சமயங்களில் லேசான வெயில் அடித்தாலும் மழையும், மேகமூட்டங்களும் தொடந்துள்ளது. அதேப்போல் பகல் நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனிடையே இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியதால் பாரஸ்டேல் செல்லும் சாலையில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் விழுந்த மரத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.