தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் லிசியான்தஸ் வண்ண மலர்கள்

ஊட்டி, ஆக. 12: தாவரவியல் பூங்காவில் ரோஜா மலர்களை போன்று காட்சியளிக்கும் லிசியான்தஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகளும் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலர்களே இல்லாத நிலையில், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு பூங்கா நிர்வாகம் மலர அலங்காரங்களை செய்துள்ளது. இதனையே தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், லிசியான்தஸ் மலர்களும் ஒன்று. ரோஜா மலர்களை போன்று மிகவும் அழகாகவும், அதே வடிவிலும் இந்த மலர்கள் காட்சியளிக்கின்றன.

வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காணப்படும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே, பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை சென்று அங்குள்ள இந்த மலர் அலங்காரத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.