தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண்

ஊட்டி, ஆக. 12: நீலகிரி வனகோட்டம், முதுமலை புலிகள் காப்பக மண்டலத்தில் பொது மக்களின் வன விலங்கு தொடர்பான குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்களை ஒட்டியுள்ளதால், உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதால், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும், தினமும் பல்வேறு பகுதிகளிலும் வன விலங்குகள் தாக்குவது தொடர் கதையாக உள்ளது. நேற்றும் கூடலூர் பகுதியில் தனியார் எஸ்டேட்டில் காவலாளி ஒருவரை யானை மிதித்து கொன்றுள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், பொதுமக்களுக்கு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த குறைகளை தெரிவிக்க அவசர கால உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ இந்த அவரகால எண்ணை 1800-425-4343 அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் ராஜேஷ்குமார் டோக்ரா, வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம் கிருபா சங்கர், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இது 24x7 சேவை ஆகும். ஆதலால் பொது மக்கள் அனைவரும் வனவிலங்கு குறித்த தகவலை இந்த எண்ணிற்கு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News