தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு மாடு கூட்டம்

ஊட்டி, நவ. 11: ஊட்டி தமிழகம் மாளிகை பகுதியில் நாள்தோறும் வலம் வரும் காட்டுமாடுகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மேய்ச்சல் தேடி வரும் போது, பொதுமக்களை தாக்கி விடுகின்றன. இதில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.வனங்களை ஒட்டிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்த இந்த காட்டு மாடுகள் தற்போது நகர் பகுதிகளுக்குள்ளும் சர்வ சாதாரணமாக வந்துச்செல்கின்றன.

Advertisement

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தமிழகம் மாளிகை பகுதியில் நாள்தோறும் ஒரு காட்டு மாடு கூட்டம் வலம் வருகிறது. இவைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே ஹில் பங்க் - பிங்கர்போஸ்ட் சாலையில் வலம் வருகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியடைகிறார்கள்.இந்த காட்டு மாடு கூட்டத்தை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement