தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்கால்மட்டம், ஒண்டிவீடு பகுதிகளில் பழுதடைந்து காட்சியளிக்கும் பயணியர் நிழற்குடைகள்

 

Advertisement

ஊட்டி, டிச.3: ஊட்டி அருகே பெங்கால்மட்டம் மற்றும் ஒண்டிவீடு பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடைகள் சேதமடைந்து காட்சியளிப்பதால் ெபாதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளில் முக்கிய பகுதிகளில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி - மஞ்சூர் சாலையில் காத்தாடிமட்டம், ஒண்டிவீடு மற்றும் பெங்கால்மட்டம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றியும், வாகனங்கள் மோதியதில் சேதமடைந்து மேற்கூரைகள் பெயர்ந்தும் காட்சியளிக்கின்றன. இதனால் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மழை மற்றும் குளிரான காலநிலை நிலவி வரும் நிலையில் பழுதடைந்து காட்சியளிக்கும் இந்த நிழற்குடைகளை பயன்படுத்த முடியாமல் ெபாதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ெபாதுமக்களின் நலன் கருதி பயணியர் நிழற்குடைகளை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News