தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலி செய்யாறு அருகே சோகம் காதல் திருமணமான 2 மாதத்தில்

செய்யாறு, ஜூலை 7: செய்யாறு அருகே காதல் திருமணமான 2 மாதத்தில், டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா மேல்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28), அறுவடை இயந்திர டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு, பைக்கில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். வெம்பாக்கம்-அழிவிடைதாங்கி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கவுசல்யா, பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காதல் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement