தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு

 

Advertisement

முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாலத்தூர் 6வது வார்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், ஆரியலூர் ஊராட்சி சித்தாலத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த மின் வினியோகம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையில் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சமீபத்தில் அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க முடிவு செய்து சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 63கே.வி புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்நிலையில் நேற்று புதிய மின்மாற்றி திறப்பு விழா நடைபெற்றது. இதில் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் குமார் போர்மேன் அசோகன், மின் ஊழியர்கள் பன்னீர் செல்வம், மகேந்திரன், மின் ஊழியர் திருஞானசபந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக மின்சார ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement