தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம்

 

பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூரில் புதிய புதினத்தின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிஞர் பாட்டாளி எழுதிய தீராக்களம் எனும் புதினத்தின் திறனாய்வுக் கூட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் காப்பியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டதலைவர் செல்லதுரை, புலவர் அரங்க நாடன், பாவலர் கோவிந்தன், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியை ரம்யா, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிஞர் அகவி, திருச்சியைச் சேர்ந்த பாவலர் கவித்துவன் ஆகியோர் கலந்து கொண்டு, தீராக்களம் எனும் புதினம் குறித்து திறனாய்வு உரை நிகழ்த்தினர். விழாவில் முன்னாள் அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் தமிழ் மாறன், வாழையூர் குணா, அகரம் திரவியராசு ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளியைப் பாராட்டிப் பேசினர்.

பாவலர் தமிழோவியன் தமிழிசைப் பாடல்கள் பாடினார். இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் பாட்டாளி ஏற்புரை பேசினார்.  முன்னதாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பாளை செல்வம் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் சிவானந்தம் நன்றி தெரிவித்தார். அடுத்த நிகழ்வில் பெரம்பலூரில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.