தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோபாலசமுத்திரம் பகுதியிலேயே புதிய வீடுகளை கட்டி தரவேண்டும்

நெல்லை,ஜூன் 24: கோபால சமுத்திரத்திலேயே வீடுகளை கட்டி தரக்கோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு மக்கள் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை அருகே கோபாலசமுத்திரம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனு: கோபாலசமுத்திரம் முகாமில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நபர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் அரசு கட்டித் தரும் புதிய வீடுகளை, நாங்கள் இப்போது இருக்கும் கோபாலசமுத்திரத்திலேயே கட்டித் தரும்படி கேட்டிருந்தோம். அதன்படி அங்கேயே வீடு கட்டித் தருவார்கள் என்று நம்பியிருந்தோம்.

ஆனால் தற்போது இந்த இடத்தில் இல்லாமல் திருவிருந்தான்புள்ளி என்ற ஊரின் மலையடிவார பகுதியில் புதிய வீடுகள் கட்டித் தர சேரன்மகாதேவி தாசில்தார் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த பகுதியில் ஆயத்த வேலைகள் நடைபெறுவதை அறிந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியே வீடுகள் வசதி இல்லாவிட்டாலும், பள்ளி, மருத்துவமனை செல்வதற்கும், வேலைவாய்ப்புக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் பெண்கள் ஓலை முடைதல் உள்ளிட்ட வேலைகள் மூலம் பணம் ஈட்டி வருகின்றனர். எனவே நாங்கள் தற்போது இருக்கும் கோபாலசமுத்திரம் பகுதியிலேயே புதிய வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related News