தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை: எம்எல்ஏ ஆய்வு

 

Advertisement

பொன்னேரி, மே 27: பொன்னேரி நகராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ.நகரில் 19, 20, 25 வார்டுகளில் கடந்த 22 ஆண்டு காலமாக சீரமைக்கப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படு இருந்தது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலையை சீரமைத்து தரும்படி பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து, பொன்னேரி மக்களின் நிலையை எடுத்துரைத்து சாலையை சீரமைத்து தரும்படி வேண்டுகோள் வைத்தார்.

அதனை ஏற்று புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி கடந்த இரு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டு மிக விரைவாக சாலை அமைக்கும்படி உத்தரவிட்டார். அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நல்லசிவம், ராஜேஷ், ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

Advertisement

Related News