தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு

 

Advertisement

தூத்துக்குடி, செப் 2:தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார். தூத்துக்குடி நகர பொதுமக்களின் நலன் கருதி காவல் துறை சார்பில் 310க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஏற்பட்ட கலவரத்தின் போது சமூக விரோதிகளா டவுன் பகுதியில் இயங்கி வந்த 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டன. இதன் பின்னர் ஒரு சில கேமராக்கள் மட்டுமே இயங்கி வந்தன.இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதான நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றங்களை கண்டறியவும், கண்காணிக்கவும், விபத்து நடைபெறுவதை தடுக்கவும் முக்கிய இடங்களில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், டவுன் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி நகர பகுதிகளில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மிகக் குறுகிய காலத்தில் சீரமைத்துள்ளனர். இதில் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்திடும் வகையில் அவை மீண்டும் சரி செய்யப்பட்டது. இந்த சிசிடிவி கண்காணிப்பு திரை பொதுமக்களின் நலனுக்காக எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்து பார்வையிட்டார். மீண்டும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News