தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

 

Advertisement

மணப்பாறை, செப்.18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான புதிய பேருந்து வழித்தடம் நேற்று தொடங்கப்பட்டது. மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரை இயங்கி வந்த நகர பேருந்து வழித்தடம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயங்காமல் இருந்து வந்ததாம். இதனால், அப்பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பேருந்தை இயக்கிட வலியுறுத்தி நேற்று இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தலைவர் ராஜா(எ) வீரசிவமணி மற்றும் புறநகர் மாவட்ட இளைஞரணி செயலர் சங்கர் ஆகியோர் தலைமையில் பழையக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின்படி, நேற்று பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான புதிய பேருந்து வழித்தடம் தொடங்கியது. ராஜா(எ)வீரசிவமணி, சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மீண்டும் பேருந்து வழித்தடம் கிடைக்கப்பெற்றது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Related News