தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 2024-25ம் ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டது. கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்கள் மூலமாக பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இதில் கச்சனம் பள்ளிக்கு உட்பட்ட காகம்,ஆப்பரக்குடி, கச்சனம் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெறாத 15 வயதிற்கும் மேற்பட்ட கற்போர் பயன்பெறுகின்றனர். இதன் துவக்க விழாவில் வட்டார கல்வி அலுவலர் பேருந்து பயணத்தின் போது தாங்கள் செல்லவிருக்கும் ஊரின் பெயரை கண்டறிவதற்கு எழுத்தறிவு மிகவும் அவசியம் என எடுத்துக் கூறினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அனுப்ரியா முன்னிலை வகித்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆசிரியர்கள் ஜெயந்தி, லட்சுமி பரமேஸ்வரி, தன்னார்வலர்கள் ரம்யா, சூரியகலா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் கற்போருக்கான புத்தகங்களும் வழங்கப்பட்டது.

Advertisement