தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான கட்டுரை போட்டியில் நெடுவயல் பள்ளி மாணவி இரண்டாமிடம்

கடையநல்லூர்,ஜன.4: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த மாநில அளவிலான கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் பெற்ற நெடுவயல்  சிவசைலநாத நடுலைப்பள்ளி மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25வது ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை போட்டிகள் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி மதுஜா மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3,750 பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

Advertisement

தென்காசி மாவட்ட அளவில் நடைபெற்ற திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டியில் 7ம் வகுப்பு மாணவி உமா சங்கவி வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று ரூ.5 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். பேச்சுப் போட்டியில் 7ம் வகுப்பு மாணவி இம்ரானா முதலிடம் பெற்று ரூ.5 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். 2 மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பிரபாகரனையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், வட்டார கல்வி அலுவலர்கள் முத்துலிங்கம், மகேஸ்வரி, பள்ளியின் நிர்வாகி கணேஷ்ராம், பள்ளியின் செயலர் தம்புசாமி, தலைமை ஆசிரியை சுதாநந்தினி, பள்ளிக் குழு உறுப்பினர் மணிகண்டன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டினர்.

Advertisement

Related News