தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனிலே மீண்டும் வீட்டு வரி பெயர் திருத்தம் வசதி வேண்டும்

 

Advertisement

தேனி, ஜூன் 7: தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த 2023ம் ஆண்டு வரை வரிவசூல் செய்யும் பணிகளை ஊராட்சி கிளர்க்குகள் நேரடியாக மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு மே முதல் அனைத்து ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி வரி வசூல் செய்யும் போது பெயர் மாற்றம், திருத்தம் போன்றவை கடந்த 2024 மார்ச் மாதம் வரை ஆன்லைனில் இருந்து வந்தது. இதனால் ஊராட்சி கிளர்க்குகள் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்.1ம் தேதி முதல் ஊராட்சிகளில் ஆன்லைனில் பெயர் மாற்றம், திருத்தம் செய்யும் வசதி திடீரென நீக்கப்பட்டது. இதனால் தற்போது வரி வசூலிக்கும் போது பெயர் மாற்றமோ அல்லது பெயர் திருத்தமோ செய்ய முடியவில்லை. இந்த நடைமுறையால் கட்டிய வீடுகளை கான்ட்ராக்டர்களிடம் இருந்து வாங்குபவர்கள், தங்களது பெயரில் மின் இணைப்பு கூட பெற இயலவில்லை.

எல்லாம் பழைய பெயரிலேயே தொடர்வதால் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி கிளர்க்குகள் கூறுகையில், ‘எங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் பெயர் மாற்றம், திருத்தம் செய்யும் வசதி இந்த ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் முடக்கப்பட்டு விட்டது. கம்ப்யூட்டரில் அதற்குரிய வசதி இல்லாததால் மேற்கண்ட பணிகளை எங்களால் செய்ய முடியவில்லை’ என்றனர். இதுசம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News