தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நவராத்திரி விழாவின் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Advertisement

பிரசித்தி பெற்ற சிவாலயமான அண்ணாமலையார் கோயில், உமையாளுக்கு இடபாகம் அருளிய திருத்தலம் எனும் சிறப்பை பெற்றது. எனவே, ஆண்டுேதாறும் இங்கு நடைபெறும் நவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, பிரசித்தி பெற்ற நவராத்திரி விழா நேற்று விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 2ம் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை கெஜலட்சுமி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார். அதைத்தொடர்ந்து, 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாளன்று ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாளன்று ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாளன்று சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாளன்று லிங்கபூஜை அலங்காரத்திலும், 9ம் நாள் விழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். விழாவின் நிறைவாக, வரும் 11ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது.

Advertisement