தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடி விற்பனை மும்முரம்

திருவாரூர், ஜன.23: குடியரசு தின விழாவையொட்டி திருவாரூரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதுடன் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாவட்ட கலெக்டர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். வரும் 26ந் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு அலுவலக மைதானத்தில் இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.

Advertisement

இந்நிலையில் இதில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதையொட்டி இந்த விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம் போன்றவற்றில் வர்ணம் தீட்டும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியரசு தின விழாவிற்காக கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்றவற்றில் ஏற்றுவதற்கு உரிய தேசிய கொடியினை வாங்கும் பணியில் பொது மக்கள் ஈடுப்பட்டு வருவதால் இந்திய தேசியக் கொடிகளின் விற்பனையானது திருவாரூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News