தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பரமத்திவேலூர், நவ.28: பரமத்திவேலூரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலக வளாகத்தில், பேரூர் செயலாளர் முருகன் முன்னிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ்பிரபாகரன், திமுக கொடியை ஏற்றி வைத்தார். பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து, பேரணி புறப்பட்டு நான்கு ரோடு, திருவள்ளுவர் சாலை வழியாக, பள்ளி சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரணி பேருந்து நிலையம் வழியாக பேட்டை கலைஞர் படிப்பகம் சென்று, திமுக கொடியேற்றி கலைஞர் மற்றும் அண்ணா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பன் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குச்சிப்பாளையம் அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீரோ வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் பேரூர் செயலாளர் முருகன், துணை செயலாளர் செந்தில்நாதன், வழக்கறிஞர்கள் பிரிவு துணை அமைப்பாளர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், வக்கீல் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News