தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 லாரிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது

பரமத்திவேலூர், அக்.28: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கான்கிரீட் நிறுவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது இரண்டு லாரிகளில தலா 4 யூனிட் காவிரி ஆற்று மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் மணல் கொண்டு செல்வதற்கான பர்மிட் கேட்டபோது, அவர்கள் ஆவணங்கள் ஏதுமில்லை. மணல் கடத்தலில் ஈடுபட்டது லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தித்திகிரிபட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் (41), மேச்சேரியை சேர்ந்த இளையராஜா(40), ஓமலூர் அருகே மணக்காட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர்(27) என்பது தெரியவந்தது. பின்னர், மூன்று பேரையும் கைது செய்த போலீசார், மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement