நாமக்கல்லில் 29ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் ஆக.27: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம்தேதி நடக்கிறது. நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிய உள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement