தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிபாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற தாய், மகன் கைது

பள்ளிபாளையம், செப். 25: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி(48). இவரது மகன் மனிஷ்குமார்(28). இவர்கள் கடந்த 20 வருடங்களாக, வெப்படையை அடுத்துள்ள ஆத்திகாட்டூரில் தங்கியுள்ளனர். ரேணுகாதேவி மளிகை கடை வைத்துள்ளார். மனிஷ்குமார் பீகாரில் உள்ள தொழிலாளர்களை வரவழைத்து, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோலூம் ஆலைகளில் வேலைக்கு அமர்த்தி வந்தார். இவர்களின் மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசாருடன் விரைந்த இன்ஸ்பெக்டர், ரேணுகாதேவியின் மளிகை கடையை சோதனையிட்டனர். இதில் 16கிலோ குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணிஷ்குமார், பீகாரிலிருந்து வெப்படைக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்கள் மூலம், பீகாரிலிந்து குட்கா பொருள்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து, இங்குள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தாய், மகன் இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement