தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் ரத்ததான முகாம்

திருச்செங்கோடு, ஆக.23: திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் மற்றும் சார்க் அறக்கட்டளை, சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தானம் முகாம் நேற்று செங்குந்தர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளருமான பாலதண்டபாணி தலைமை வகித்தார். செயல் இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, செங்குந்தர் பொறியியல் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் சுரேந்திரகுமார், செவிலியர் கல்லூரி முதல்வர் நீலாவதி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். சேலம் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் ராம் ரத்த தானத்தால் உண்டாகும் பயன்கள் குறித்தும், உடல் ஆரோக்கியம், சுவாச நோய் அதன் அறிகுறிகள் பற்றியும், நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவர்களிடம் கூறினார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு சேலம் ரத்த வங்கியின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement