தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா

நாமக்கல், செப்.22: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி விழா இன்று(22ம் தேதி) தொடங்குகிறது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். வரும் 1ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோயிலில் இன்று(22ம் தேதி) மச்ச அவதாரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

Advertisement

நாளை(செவ்வாய்க்கிழமை) கூர்ம அவதாரம், 24ம் தேதி(புதன்கிழமை) வாமன அவதாரம், 25ம் தேதி ரங்கமன்னார் திருக்கோலம், 26ம் தேதி ராமாவதாரம், 27ம் தேதி(சனிக்கிழமை) கிருஷ்ணவதாரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். வரும் 28ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பரமபதநாதர் அலங்காரம், 29ம் தேதி(திங்கட்கிழமை) மோகன அவதாரம், 30ம் தேதி(செவ்வாய் கிழமை) ராஜாங்கசேவையில் சுவாமி அருள்பாலிக்கிறார்.

வரும் 1ம் தேதி(புதன்கிழமை) நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் தேதி விசேஷ திருக்கோலம் ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 

Advertisement

Related News